Friday, March 11, 2011

2. தென்கரை நாடு:

தென்கரை நாடு என்பது ஆன்பொருனை (ஆம்ராந்து அல்லது அமராவதி) ஆற்றுக்குத் தென் கரையில் அமைந்துள்ளது. இன்னாட்டுக்குப் பெரிய பட்டம் கொற்றனூர் வேணாவுடையார். வேள்+நாடு = வேணாடு.
மற்றொரு பட்டக்காரர் தொண்டைமான்.

a. வேணாவுடையார்:
வேள்+நாடு = வேணாடு. கொங்கதேசத்தின் இரண்டாம் வஞ்சி (தலைநகரம்) அமைந்த காரணத்தால் இன்னாடு வேணாடு என்றும். அரசனது ஊர் கொற்றனூர் (கொத்தனூர்) என்றும் பெயர் பெற்றுள்ளது. கொத்தனூர் பெரிய கோத்திரத்தாரே தென்கரை நாட்டுப் பெரியபட்டம்

வேணாவுடையான் - கொற்றை நகர்


தண்டா மரைதனில் மீனவன் சங்கப் பலகைதனில் 
உண்டாம் புலவரை மலையோர மாயெதி ரோடிவந்து 
கண்டா தரிக்கும் பெரிய குலேந்த்ரன் கனகமுடி 
வண்டாடும் பூங்கொற்றை வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே

     (கு - ரை) முன்பு பாண்டிய நாட்டில் பன்னீரியாண்டுப் பஞ்சம் 
வந்தது. அப்பொழுது பாண்டியன் சங்கப் புலவர்களை யாதரிக்க முடியாமல் கைவிட்டான். சங்கப் புலவர்கள் பலதிசை நோக்கிச் 
சென்றார்கள். பின்பு கொங்கு நாடடைந்தார்கள். சங்கப் புலவர்கள் 
வருகையை யறிந்த வேணாவுடையான் ஊதியூர் மலைவழியாக 
எதிர்சென்று புலவர்களை யழைத்துவந்து அவர்களுக்கு உண்டியும் 
உறைவிடமும் கொடுத்துப் பாதுகாத்தான் என்பது வரலாறு.

     பாண்டியன் தன்னாட்டில் வந்த பெரும் பஞ்சத்தால் புலவர்களை 
யாதரிக்க முடியாதவனாய் வேற்று நாடுகளுக்குப் போய் வருமாறு கூறினான் என்பது இறையனார் களவியலுரை முதலியவற்றால் தெரிகிறது.

பொன்னூஞ்சல்

நெய்யினிற் கையிட நாற்பத்தெண் ணாயிரம் நீடுபெற 
மெய்யினிற் கங்கை குலத்தில்வே ணாடன் விளங்குமகள் 
கய்யினில் நெய்யுயர் பொன்னூசல் சேரக் கனிந்தவன்னை 
வய்யிற் கனக முடிசூட்டி வாழ் கொங்கு மண்டலமே.


             
http://konguvenadar.org/
கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாக கைபீயத்து போட்டுள்ளனர்:











தற்கால படி:












 b. தொண்டைமான்:
தென்கரை நாட்டின் கீழ் சமஸ்தானமன மூலனூர் சமஸ்தான பட்டக்காரர். பூச கோத்திரத்தார்

சின்னமலைக்கு எதிராக,கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாக 400 துருப்புகளை அனுப்பினார் என்கின்றன இலக்கியங்கள்.


தொண்டைமான் - மூலனூர்

கரையது மேல்கரை நாற்பத்தெண் ணாயிரங் கண்டகொங்கில்
முறையது கூறிய ஆதொண்டை மான்வந்து மூவர்சபை
திறையது வாங்கிய பூசனன் றொண்டைமான் செம்மலென
மரபது காத்து நிலைகொள்ளு வோன்கொங்கு மண்டலமே.



தென்கரை நாடு ஊர்த்தொகை:

 தாராபுரம் தாலுகாவில் தென்கரை நாடு பகுதி:


காங்கயம் தாலுகாவில் தென்கரை நாடு பகுதி:

3 comments:

  1. தகவல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கம்ஙக.

    தென்கரை நாட்டுப்பாடல்:-
    "காவல் குழாயர் கதி்த்த பெரிய குலம் ஆவல் சேர் ஆந்தை அதி ரேசன்-மேவியசீர் செம்பூதன் செட்டியுடன் தென்கொற்றை மாநகர்க்கு இன்புற்ற ஏழ் முதன்மையே"

    ReplyDelete
  2. refer all old historical events review old thoughts thanks

    ReplyDelete
  3. நன்றிங்க அருமைங்க

    ReplyDelete