Friday, March 11, 2011

கொங்கதேச பட்டக்காரர்கள் ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)

தமிழ் கூறும் நல்லுலகைப் படைத்து காசிபருக்குத் தானமாக அளித்து, சங்க இலக்கணம் கண்டு, அகத்திய சித்தரிஷி  வழியாக,   தம்மிடம்  சரண்புகுந்த ராஜன்யர்களான  சேர வேந்தர்க்கு அளித்தவரும், தொல்காப்பியரது  (திரணதூமாக்கினி) சகோதரனும், ஜமதக்கினி முனிவர் - ரேணுகை (மாரியம்மன்) மகனுமான:

இருகூர் மடத்து பட்டயம் (கொங்கு நாட்டு வழக்கம்):  

மகாபாரதம் - சாந்தி பர்வம்:





மாயவர் அவதாரமான   ஸ்ரீ பரசுராமர் 
(ஈரோடு  கோட்டை  மாரியம்மன் கோயில்  மூர்த்தி):

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் 
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி, 
கயிறுஅரை யாத்த காண்தகு வனப்பின் 
அருங்கடி நெடுந்தூண் போல - அகநானூறு-220 




ஸ்ரீ பரசுராமரிடம் தமிழ்  கூறும்  நல்லுலகை  தானமாக பெற்ற காசிபரிடம், பாண்டிய  நாட்டைப் பெற்று, முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களுக்கு ஈசனின்  ஆணைப்படி இலக்கணம் வகுத்த முதல் சித்த ரிஷியான  
ஸ்ரீ  அகத்திய மாமுனி 



மூவேந்தர்க்கும் மண்ணைப் பகிர்ந்தளித்த  மதுராபதி 
மீனாட்சி மதிற்கரை செல்லாண்டியம்மன்:


சேர கொங்க தேசத்தின் பாரம்பரிய விற்கொடி


                  சேரர் செப்புக்காசுகள் (மங்கல வாழ்த்தில் வரும் கருவூர் பணம்)


      
கொங்க தேசத்தை ஆண்ட பக்த சிகாமணிகளான சேர மன்னர்கள்:

   சேரமான் பெருமாள் நாயனார்
                                             


கொங்கதேசத்தின் கடைசி சுயாட்சி மன்னர்
            (கயிலை சென்றது 825 CE)

சேரன் கயிலை சென்றது
8.



கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே
-வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்

                                                            குலசேகர ஆழ்வார்


675 அங்கை-ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க்
கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
நாலாயிர திவ்ய பிரபந்தம்.


"கொங்கு மலை நாடு குளிர்ந்தநதி பன்னிரண்டும் 
சங்கரனார் தெய்வத் தலம்ஏழும்-பங்கயம்சேர்
வஞ்சிநகர் நகர் நாலும் வளமையால் ஆண்டருளும் 
கஞ்சமலர்க் கையுடையோன் காண்."
                                                                                                  -சேரர் மீது வெண்பா

 கொங்கு மலை நாடு - கொங்கு நாடு


சேரமான் பெருமாள் நாயனார் கயிலை் சென்ற போது சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கொங்கதேசத்தில் அரசனான தன்னுடைய அரசாட்சியையும், வரியான ஆறிலொரு பங்கையும் தானமான கொடுத்தார்

சுந்தரமூர்த்தி நாயனார் கயிலை சென்றபோது,அந்த அரசத்துவத்தையும், ஆறில் ஒரு கடமையையும்
கொங்கதேச நாட்டு குருக்களுக்கு தானமாக அளித்து சென்றார்
சுந்தரமூரத்தி நாயனாரால் பட்டம் சூட்டப்பட்ட காசிப கோத்திர ஆதி சைவ மன்னர், சேரனது விற்கொடியுடன் தங்களது சிவலிங்கம், சுவஸ்திகம், திரிசூலம், நந்தி ஆகிவற்றை சேர்த்து வெளிட்ட காசுகள் 
(கரூர் அமராவதி, R.கிருஷ்ணமூர்த்தியின் "சங்ககால கொங்கு நாணயங்கள்")

சுந்தரமூரத்தி நாயனாரால் பட்டம் சூட்டப்பட்ட காசிப கோத்திர ஆதி சைவ மன்னர், சேரனது விற்கொடியுடன் தங்களது சிவலிங்கம், சுவஸ்திகம், திரிசூலம், நந்தி ஆகிவற்றை சேர்த்து வெளிட்ட காசுகள் (கரூர் அமராவதி, R.கிருஷ்ணமூர்த்தியின்

உதாரணமாக 24 நாடுகளில் 13வதான அரைய நாட்டு அதிபதியான சிவகிரி மடாதிபதி பாரம்பரிய பல்லக்கில் பரம்பரை கிரீடத்துடன் பட்டண பிரவேசம் செய்யும் காட்சி, மட இளவரச பட்டம் பட்டத்து வாளுடன் குதிரைமேல் முன் செல்லல்.
மட ஊழியர்களான மீனாட்சிவலசு சேவகர், சிவிகையார் ஜாதியினர். சுற்றத்தில் சிஷ்யர்களான அரையநாடு நாட்டாரான பட்டக்காரர் வம்சத்தை சேர்ந்த தலையநல்லூர் கூரை கோத்திரத்தார்.




கொங்கதேசம் எல்லைகளுடன்:


குளிர்ந்தநதி பன்னிரெண்டு: 
  1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி), 
  2. காஞ்சி (நொய்யல்), 
  3. வானி (வவ்வானி, பவானி), 
  4. பொன்னி (காவேரி), 
  5. சண்முகநதி, 
  6. குடவனாறு (கொடவனாறு), 
  7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு), 
  8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
  9. மீன்கொல்லிநதி
  10. சரபங்கநதி
  11. உப்பாறு
  12. பாலாறு
சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள்

  1. கருவூர் [கரூர்], 
  2. வெஞ்சமாக்கூடல், 
  3. பேரூர் (அ) திருச்செங்கோடு 
  4. திருநணா [வவ்வானி - பவானி], 
  5. கொடுமுடி,
  6.  திருமுருகன்பூண்டி, 
  7. திருப்புக்கொளியூர் [அவினாசி])
வஞ்சிநகர் நாலு: 

  1. கருவூர்,
  2.  தாராபுரம், 
  3. மூலனூர், 
  4. விளங்கில்

காப்புரிமை செய்யப்பட்டது. MyFreeCopyright.com Registered & Protected


பாரதவர்ஷத்தில் ஐம்பத்தியாறு தேசங்கள் உள்ளன. தேசம் என்பது socio-climatic unit ஐக்குறிக்கும். இயற்கை அரண்கள் ஒவ்வொரு தேசத்துக்கும் எல்லைகளாக உள்ளன. சேர அல்லது கொங்க தேசத்துக்கும் மலைசூழ்ந்த எல்லைகள் உள்ளன. இவ்வெல்லைகளுள் micro – socioclimatic unit களும் உள்ளன. இவை நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. அன்னியர்களால் ஃபிரீமேசான் கிழக்கிந்திய கம்பெனி அன்னியமுறையில் அமைக்கப்பட்ட இன்றைய சர்க்கார் AC அறையில் அமர்ந்துகொண்டு தாந்தோன்றித்தனமாக இவற்றைப் பிரித்திருப்பினும், இயற்கை, பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பிரிவுகள் என்றும் நமது வாழ்க்கையின் வழியாக உள்ளன. நிலையான அமைதியான வாழ்வு (இதனையே சனாதன தர்மம் என்றும் sustainable living என்றும் ஆழைத்து வந்துள்ளோம்) இருந்திட இம்முறை பல்லாயிரம் வருட பரிணாம வளர்ச்சிக்குப்பின் உருவானதாகும். நீர் நிலைகள் பராமரிப்பு (அணைக்கட்டுஉதாரணம் நொய்யல், அமராவதி, பவானி, திருமணிமுத்தாறு, காவேரி அணைகள் போன்றவை, ஏரிகள்உதாரணம் பூந்துறை, வெள்ளோடு, ந்சியனூர், எழுமாத்தூர் ஏரிகள் முதலியவை, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள்காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, இருட்டணை முதலானவை, கிணறுகள், தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள்ஈரோடு, பெருந்துறை தெப்பக்குளங்கள் போன்றவை - , தடாகங்கள்) முதலியவை , பண்பாட்டினைப் பாதுகாத்தல் (தர்மங்கள்,சமுதாய கூட்டுக்குடும்ப அமைப்புகள், கலைகள், இலக்கியங்கள், கோயில், மடம், சத்திரங்களைப் பாதுகாத்தல், மரங்கள் நடுதல், மருத்துவம், கால்நடைகள், நாட்டு வித்துக்கள் தயார் செய்தல்) - .

கொங்கதேசத்தினை 24 நாடுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் பிராமணர்களிலிருந்து சாம்புவன் வரை 18 குடிகள் உள்ளனர். ஒவ்வொரு குடிக்கும் தனித்தனியே ஊர்த்தலைவர்கள் முதல் பட்டக்காரர்கள் வரை உண்டு. இவர்கள் தத்தமாது குடிகளைக் கட்டிக்காத்து வந்துள்ளனர். இதற்கு ஜாதிப்பஞ்சாயம், சமிதி அல்லது ஆயம் என்று பெயர். இவர்களுக்கு மேல் ஒவ்வொரு நாட்டிற்கும் பெரிய வீட்டுக்காரர், நாட்டுக்கவுண்டர், பட்டக்காரர், நாட்டார், காராளர், எஜமானர் என்று அழைக்கப்படும் நாட்டுப் பட்டக்காரர்கள் இருந்து வந்துள்ளனர். இப்பெயர்கள் அனைத்தும் ஒரே பொருளையே குறிக்கின்றன. இவர்கள் சபை (மன்றம்) நடத்தி வந்தனர். இதனால் மன்றாடி (மன்றம் + ஆடி) என்று பெயர் பெற்றனர். இவர்கள் நாட்டு சபைக்கும், அனைத்து ஆயங்களுக்கும் தலைவர்கள். இது நிர்வாக அமைப்பாகும். நாத்திக களப்பிரர், துருக்கர் காலத்தில் இதனை நேரடியாக அழிக்க முயன்று தோற்றனர். பிறகு நாத்திக கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் இதனை அழித்தாலோ, கைபற்றினாலோதான் கொள்ளையடிக்க முடியும் என்பதனைப் புரிந்துகொண்டு இன்று வரையில் வெவ்வேறு வழிகளில் சுதேசி ஆட்சிமுறைகளை இன்றுவரை அரித்தெடுத்து வருகின்றனர்.

நாட்டார்கள் புலவரைப்பேணல், புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, தீயன பேசாதிருத்தல், அறுபத்திநான்கு கலைஞத்துவம், பெண்களுக்கு சம உரிமைகள் (குதிரையேறுதல், மன்றம்சபை நாட்டாண்மை முதலியவை), குருபக்தி, தெய்வபக்தி போன்ற தனித்தன்மையுடன் உள்ளனர். இவை இவர்களை காணியாள, குடியான கவுண்டர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

குறிப்பு: இது துருக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தார், தாசில்தார், மன்சப்தார், தாலுக்தார், இனாம்தார் முறைகளல்ல,
விஜயநகரத்தாரால் ஏற்படுத்தப்பட்ட பாளையக்காரர் முறையுமல்ல,
வெள்ளையர்காளால் மாற்றியமைக்கப்பட்ட பாளைய பட்டக்காரர் முறையுமல்ல (Pre-feudal lords).
ஆதியில் சேரமான் ஏற்படுத்திய சங்ககால முறை. கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கயிலாயம்  செல்லும் முன் தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு. 

 இன்றும் சேர குல உபாத்திகளான புலவர்கள்,தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர். 
kongupulavars.blogspot.in


கொங்கதேசம்:  ராயர் – அரசர் - சேரமான்
|
|
நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்): ப்ரதானி காமுண்ட (பிரதானி காமிண்டன் [கவுண்டன்] ,ஆறுநாட்டார்) - பட்டப்பெயர்: நயினார் (17வது நூற்றாண்டு வரை)
|
|
இருபத்திநான்கு நாடுகள்: ப்ரபு காமுண்ட (பிரபு காமிண்டன் [கவுண்டன்],  பெரியநாட்டார்பெரியஎஜமானர்,பெரியகாராளர்பெரியபட்டக்காரர்) பட்டப்பெயர்: நயினார்
|
|
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சமஸ்தானங்கள்: சம்ஸ்தான காமுண்ட (சமஸ்தான காமிண்டன்[கவுண்டன்], நாட்டார்சின்ன எஜமானர்காராளர்பட்டக்காரர்) பட்டப்பெயர்: நயினார், மன்றாடி
|
|
சமஸ்தானத்தில் காணி ஊர்கள்: காணி காமுண்ட (காணி காமிண்டன் [கவுண்டன்], காணியாளகவுண்டர்) பட்டம்: கவுண்டர்
|
|
காணிக்குள் கிராமங்கள்: க்ராம காமுண்ட ( கிராம காமிண்டன் [கவுண்டன்] பட்டப்பெயர்: ஊர்கவுண்டர்,ஊர்கொத்துகாரர்) – 
ஊர் காவல்: ஊர் சாம்புவர் (தலையாரி)
|
ஊர் க்ராம மண்யகார (கிராம மணியகாரர்ஊர் மணியம்) -
ஊர் கணக்கர்க்ராம கர்ணம் (கர்ணையம்கணக்குப்பிள்ளை) –
வரி பெறுவோர் தோட்டி 
|
|
கிராமத்துக்குள் கவுண்டர்கள்: காமுண்ட (காமுண்டன் [கவுண்டன்], 
பண்ணையக்காரன்பண்ணாடி)
இவருக்குக்கீழ் பண்ணையாட்கள்.

கிராம நிர்வாக பஞ்சாயத அங்கங்கள்:
1. காமுண்ட (ஊர் கவுண்டர்/ ஊர் கொத்துக்காரர்) - நீதி
2. ஊர் மணியகாரர் - மந்திரி (கர்ணிகர்/கணக்கர் assistant)
3. ஸ்தானிகர்: (காணியாட்சி குருக்கள்) - சாத்திரம்
4. ஊர் தலையாரி (குறவர்) - காவல்
5. ஊர் தோட்டி (பரையர்) - வரி 

பார்க்க:
சங்க சேரர் நிர்வாகத்திலேயே இவ்வமைப்பு இருந்ததனை இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

மேற்கூறியது பொது அரசாட்சி முறை (சபை). அது மட்டுமல்லாது தனித்தனி ஜாதிகளுக்கு trade guild and caste administrationனுக்கு தனித்தனியே சமிதி  முறையான ஜாதிப்பஞ்சாயத்துகளிருக்கின்றன.

வேள்/ராயன் (அரையன்):
ஆதி சேர மன்னன். (894 வரை)

825-894இல் சேரமான் பெருமாள் நாயனார் கயிலை செல்லும் முன்னர்,கொங்கதேசத்தை சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்தார்.அவரோ,அதனை அங்கிருந்த குலகுருக்களுக்கு அளித்தார்.அதுவே இன்றைய சஞ்சார காணிக்கை, மாங்கல்ய வரி.இதனை குருகுல காவியம் என்ற பண்டைய கொங்கதேச இலக்கியம் கூறுகிறது:http://www.kongukulagurus.com




அதன்பின் பாண்டியனது காப்பாட்சி (894 - 1330 நடுவே சோழ, ஹொய்சல தலையீடுகள்)

(பாக்தாத் நாத்திக பௌத்த கபாலா யூத அடிமை கலிபா அடியாள் அலாவுதீன் கில்ஜாய் பட்டாணி, மாலிக் காஃபர் கொள்ளைக்காலம் 1329-1336)

சங்கமர் விஜயநகர பொறுப்பாட்சி (1336-1485)
பின்னர் சாளுவ-துளுவ-ஆரவீடு வம்சத்தார் விஜயநகரத்தை கைபற்றி ஆதிக்க பேரரசு . (1485-1672)
மைசூர் துரைகளது பேராதிக்கம் (1672- 1799)


நாத்திக பௌத்த இலுமினாட்டி அடியாள்  ப்ரீமேசன் வெள்ளையர் அடிமைத்தனம் - Masonic  British  East  India  Company - அவர்கள் வெப்சைட்டிலிருந்தே: 
தற்பொழுது நாத்திக இலுமினாட்டி காமன்வெல்த்தின் அடிமைத்தனம்:

http://greatgameindia.com/did-india-really-become-independent-on-august-15th-1947/  

பிரெஞ்சு பிரீமேசானிய கிழக்கிந்திய கம்பெனி கையால் திப்புவையும் தீரன் எதிர்த்தார்:
ஆனால் சில மேசானிய போலி சரித்திரவாதிகள் இதனை மறைத்து,தீரன் பிரெஞ்சிடம்,திப்புவிடம் கூட சேர்ந்து சண்டையிட்டான் என புளுகுகின்றனர்.

தூந்தாஜியின் குழு இரண்டு மேசானிய கம்பெனிகளுக்கு எதிராகவும் சண்டையிட்டது:

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

https://archive.org/details/journeyfrommadra02hami/page/214


தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை, வேட்டுவர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்.

கொங்குநாட்டை இலுமினாட்டி கிழக்கிந்திய கம்பெனியிடம் காட்டிக்கொடுத்து தீரன் சின்னமலையை காட்டிக்கொடுத்தவர்கள் யார்?
https://kongupattakarars.blogspot.com/2011/03/19.html
https://kongupattakarars.blogspot.com/2011/03/23.html
https://kongupattakarars.blogspot.com/2011/03/3.html  https://kongupattakarars.blogspot.com/2011/03/2.html
கொங்கு வெள்ளாளர்களில் இவர்களும், வேட்டுவர்களில் கரூர் பகுதி சிறுதாலியினரும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஜமீன்களும்.

தியாகிகள் யார்?
 https://kongupattakarars.blogspot.com/2011/03/1.html   https://kongupattakarars.blogspot.com/2011/03/22.html

இவர்கள் மட்டுமின்றி வேட்டுவர்,நாயக்கர்களைப் பற்றிய  தியாகி/துரோகி பட்டியல் ஒவ்வொரு நாட்டின் பதிவிலும் போடப்பட்டுள்ளது.
                                                                                                                                         

India became “Republic within Commonwealth on 1950”; now what is republic? Republic simply means ‘rule of law’ but note the word ‘within’; one cannot be free if they are ‘within’ other’s jurisdiction no matter how many constitutions we write!"

அதாவது பிரிட்டன் ராணி தலைமையிலான காமன்வெல்த்துக்குக் கட்டுப்பட்ட அடிமைகள் நாம்!! அவர்களை வாழ்த்தும் ஜன கண மனதான் கீதம், அவர்கள் சட்டம்தான், செய்பவர்கள் நமது கருப்பு கபாலா மேசன்கள்! நாமல்ல.

வேளிர் (நாட்டார்):

நாட்டாரது சித்திரமேழிக்கொடி (பொன் மேழிக்கொடி)


 சித்திரமேழி நாட்டார் சாசனம் 

கூரைக்கு கீழிருக்கும் பட்டி நாட்டாரில் சித்திரமேழி நாட்டாருக்கு உரியது
(காஞ்சிக்கோயில் நாடு)

1.பூந்துறை நாட்டுக் கவுண்டர்கள் மங்கிலியம் (சத்து, முகப்பு கொண்டது):


    அரசன் நாட்டில் முதல் ஏரும் ஓட்டுவதும், விதைப்பதும், அதனை அடுத்து, அவனது புத்திரவர்க்கத்தினரான சித்திரமேழி நாட்டார்  ஓட்டி , விதைப்பதும், அதன் பின் அதிகாரிகள் (காணியாளர்), அடுத்து வரிசையாளர் தொடர்வதே நமது பாராதவர்ஷ மரபு: https://en.wikipedia.org/wiki/Royal_Ploughing_Ceremony
    https://ta.wikipedia.org/s/ahd

    விதேக தேச அரசர் ஜனகர் மிதிலையில் (நேபாளம்) உழவு ஓட்டும்பொழுது சீதை பூமியிலிருந்து கிடைத்தமை (தாய்லாந்து ஓவியம்). நாட்டார் சபையினர்  அதனைப்பார்த்து வணங்குதல் 

     இன்றும், நாட்டின் முதல் பொன்னேர் ஓட்டும் பூர்வ காம்போஜ (கம்போடிய) மன்னர்


    குலகுரு அந்தணர்கள் ,தீர்த்தம் தெளித்து முன் செல்ல,மன்னர் பொன்னேர் உழ,ராணி விதைக்கிறார் 

    பின்னால் விதைக்கூடையை சீலை  கட்டிக்கொண்டு  ஏந்தி வரும் ராணி 

    பொன்னேர் ஓட்டும் தாயலாந்து (சியாம தேச) மன்னர்

    குலகுரு அந்தணர்கள் ,தீர்த்தம் தெளித்து முன் செல்ல,மன்னர் பொன்னேர் உழ,ராணி விதைக்கிறார் 

    விதை வீசும் மன்னரும், சீலை கட்டிக்கொண்டு விதைக்கூடையை ஏந்தி வரும் ராணி 

    பர்மாவில்!  
    நமது தென்கரை நாட்டு சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் வேணாடர் இன்று வரை பொன்னேர் செய்து வருகின்றனர்.



    மேற்கண்ட பாரதவர்ஷ தேசங்கள் போல,  ஜப்பானில் மன்னர் செய்யும் நடவு சடங்கு:
    https://web.archive.org/web/20120627093430/http://spice.stanford.edu/docs/145 
    https://kanakoskitchen.com/2009/10/20/gohan/
    முதல் நடவு நடும் ஜப்பானிய மன்னர் அகிஹிடோ



    நாட்டார் என்பார் வேளிர், அவர்தம் சபை (நாட்டு சபை) சித்திரமேழி நாட்டார் சபை என அழைக்கப்படுகிறது. அவர்கள் அமைச்சர்களாக இருந்து அரசனுடன் மணவினை செய்து வந்தனர். முல்லை
    நிலத்தின் உயர்ந்தோர் நாடன் சங்க இலக்கியம். "கொழுமுனை தீண்டாக் காராளர்" எனப்பட்டனர்.பதிற்றுப்பத்து பத்துகளின் முதல் பதிகங்கள் மூலமாக வேண்மான் மக்கள் (வெளியன் - விழியன் மற்றும் பதுமன் - பதுமன்)  வழியும், சோழன் மகள் வழியும் சேரர் மணவினை கொண்டனர் என்று அறியலாம். இன்று இவ்வெளியர் (ராசிபுர நாடு வல்வில் ஓரி வங்கிசத்தார்) வேள்குறிச்சி (பேளுக்குறிச்சி) என்ற ஊரில் ஆட்சி செய்து வருகின்றனர். வெளியன் வேள் சங்ககால வேளிர் குடிப் பெருமகன்.

    இவனது மகன் ஆய் எயினன்.
    மகள் நல்லினி. பதிற்றுப்பத்து பதிகம் 2 இதனைக் குறிப்பிடுகிறது. 

    இவர்கள் உறவு முறையால் சேர மன்னர்களோடு இணக்கமாக வாழ்ந்தனர். நன்னன் சேரர்களுக்குப் பகைவன். நன்னனின் படைத்தலைவன் மிஞிலி வெளியன் வேள் மகன் ஆய் எயினனைப் போரில் வீழ்த்தினான். அகநானூறு 208

    வெளியன் வேள் மகனைப் புலவர் பரணர் குறிப்பிட்டுள்ளார். 
     

    "மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
    இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு 
    வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் "

     அவனுக்கு மந்திரிகளாகவும்  (ப்ரதானி காமுண்ட) , ராஷ்ட்ர காமுண்ட எனப்படும் நாட்டுக்கு கவுண்டர்களாகவும், அதற்குக்கீழ் சமஸ்தான காமுண்டர்களாகவும் இருந்தவர்களே இந்த வேளிர். பொன்னேர் ஓட்டுவதனால் மேழிக்கொடி படைத்தோர். எஜமானர், காராளர், நாட்டுக்கவுண்டர் என்ற பெயர்களும் உண்டு. சேரனுக்கு கொள்வினை கொடுப்பினை செய்தவர்களென்று, சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இன்று இவ்வெளியர் (ராசிபுர நாடு வல்வில் ஓரி வங்கிசத்தார் - வெளியன் [விழியன் - வெளியன் கோத்திரத்தார்])

    சங்கப்பாடல்:
    "மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
    இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு 
    வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் "

    1443ல் ராசிபுரம் கல்வெட்டு:

    1929ல் குலகுரு பாசூர் மடத் தலைக்கட்டில்:


    வேளதரையன் (சமஸ்:ராயன் - தமிழ்:அரையன்) என்பதன் மூலம் மறை/எழுதாக்கிளவி/கேள்வியாகிய வேதத்தின் புருஷ சூக்தப்படி 'ராயன்ய/
    ராஜன்ய (க்ஷத்திரியர்கள்) என அறியலாம்.
    https://www.youtube.com/watch?v=U-NHJffUIIo   (3:50வது நிமிடம்)
    "புருஷனுடைய புஜங்கள் ராஜன்யர் (க்ஷத்திரியர்) ஆவர்
    கொங்க வேளதரையன் - பார்க்க "கொ" வரிசை - பக்கம் 11
    குறிப்பு: தொல்காப்பியம் கூறும் "வேளான் மாந்தர்" தொல்காப்பிய மரபின்படியே, வேளிர்தம் மக்களான அனுலோம, பிரதிலோமத்தின்கண் உருவாகும் சூத்திரரேயன்றி வேறல்ல. சூத்திரரோடரசரான ராஜன்யர் மணம் கொண்டதுமில்லை, வேளாளர் வைசியர்க்குத் தாழ்ந்தோருமில்லை. வாழிபுல்லாக்கவுண்டர் கதை, ஆதொண்டன் சரித்திரம், பட்டயங்கள் மூலம் வேளாளர் அரசனுக்கு "புத்திரவர்க்கம்" அல்லது பிள்ளைகள் (மருமக்கள்)ளென்றிருந்ததை அறியலாம். சாஸ்திரம்"ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அதனால் ஏற்படும் தீட்டு பிராமணர்களுக்கு பத்து நாட்கள், க்ஷத்திரியர்களுக்கு பன்னிரண்டு நாட்கள், வைசியர்களுக்கு பதினைந்து நாட்கள் மற்றும் சூத்திரருக்கு முப்பது நாட்கள்" என்பதன் மூலமும் வெள்ளாளர்களே க்ஷத்திரியர்கள் என்பது தெளிவாகிறது.


    எழுகரை நாட்டார்கள் 12 அன்று வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசி, கைநீட்டுவதனை  நிறுத்துகி்ன்றனர். 

    நாட்டுக்கல் சீர் என்று தற்போது நடைபெறும் கல்யாண சீர் நாட்டார்களை அழைத்து அவர்கள் தலைமையிலேயே கல்யாணங்கள் நடப்பன என்பதற்கு சாட்சியாகும்.
    மங்கல வாழ்த்து பாடல்கள்:

    "திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து
    நட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைதனுக்கு         -  110

    நன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே"

    "ஆரணங்கு பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
    மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
    வழமைதாய்வந்து நலமதாய் நின்று
    "
              - 200


    "ஆணிப் பெண்ணவளை அலங்கரித்துக் குளம் கோதி
    மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
    வலமதாய் வந்து நலமதாய் நின்று"         -   210

    நாட்டுக்கல்:
    நாட்டாரை (வேளிரை) வணங்கும் பாரம்பரிய நாட்டுக்கல்



    தொல்காப்பியம்-அகத்தினையியல்
    https://www.tamilvu.org/slet/l0100/l0153ine.jsp?sno=242

    32 "மன்னர் பாங்கின் பின்னோர்1 ஆகுப".


    இது, காவற்பகுதியாகிய முறை செய்வித்தற்கு உரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று.

    (32)
    1. 'மன்னர் பின்னோர் ' என்ற பன்மையான் முடியுடையோரும், முடியில்லாதோரும் உழுவித்து உண்போரும், உழுது உண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார்.

    மன்னர் பாங்கின்- அரசரைச் சார்ந்து வாழும் பக்கத்தராகி நிற்றல்  காரணமாக; பின்னோர்
    ஆகுப  -  பின்னோரெனப்பட்ட  வேளாளர்  வரையறையின்றி  வேந்தன்  ஏவிய   திறமெல்லாவற்றினும்
    பிரிதற்கு ஆக்கமுடையராகுப என்றவாறு.
      

    மன்னர்     பின்னோரென்ற  பன்மையான்    முடியுடையோரும்    முடியில்லாதோரும்,   உழுவித்து
    உண்போரும்,  உழுது.  உண்போருமென  மன்னரும்,  வேளாளரும் பலரென்றார்.   ‘வேளாண்மாந்தர்க்கு’
    ‘வேந்துவிடுதொழிலில்’  என்னும்  மரபிற்  சூத்திரங்களான்  வேளாளர்   இருவகையரென்ப  அரசரேவுந்
    திறமாவன  பகைவர்மேலும்  நாடு  காத்தான்  மேலுஞ்  சந்து  செய்வித்தன் மேலும்   பொருள்வருவாய்
    மேலுமாம்.
      

    அவருள்     உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டதி  தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும்
    அழுந்தூரும்  நாங்கூரும்  நாவூரும்  ஆலஞ்சேரியும்  பெருஞ்சிக்கலும்    வல்லமுங்  கிழாரும்  முதலிய
    பதியிற்றோன்றி   வேளெனவும்  அரசெனவும்  உரிமையெய்தினோரும்,    பாண்டிநாட்டுக்  காவிதிப்பட்ட
    மெய்தினோருங், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை  வேந்தர்க்கு  மக்கட் கொடைக்கு
    உரிய வேளாளராகும். “இருங்கோ வேண்மானருங்கடிப் பிடவூர்” எனவுஞ் சான்றோர் செய்யுட்   செய்தார்.
    உருவப்பஃறேர்   இளஞ்சேட்சென்னி   அழுந்தூர்   வேளிடை   மகட்கோடலும்    அவன்   மகனாகிய
    கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலுங் கூறுவார்.  


    வல்லாளயென்பது 
    வெள்ளாளயென்பதன் வேர்ச்சொல்

    அதாவது சேரர் மட்டுமின்றி சோழர்,பாண்டியர்க்கும் அந்தந்த நாட்டு வேளாளர்களே கொடுப்பினை செய்து வந்தோர்களென்று தெளிவுபடு்ததுகிறது.

    "கங்கா குலம் விளங்க கம்பர் சொன்ன வாழ்த்துரையை" - கொங்கருக்கு கம்பர் பாடிய மங்கல வாழ்த்துரையில்.

    அரசன் வேளாளர் சூத்திரராயின், மணவுறவு கொள்தலெவ்வாறு? அவர் மக்கள் பட்டமேற்பது அனுமதிக்கப்படாராயிற்றே!
    கங்கை குலத்தாரும், சோழிய குலத்தாரும் அமைப்பு முறையில் சமனாயினும், முன்னோர் வேளாளரில் முதலான சேர நாட்டாராதலால் கணத்தோரென்று பிற வேளாளர்கள் கூறுவதைக்காணலாம். அண்ணன்மாரில் பொன்னர் சோழன் மகளை நிராகரித்ததும் மேற்கூறியதால்தான். சோழன் வேளாளர் குலமென்பதால் முன்வந்தும், தமக்கு கணங்குறைந்தது சோழியமென பொன்னர் மறுத்ததும் வரலாறு. 

    pasurmatam.blogspot.in யில் யாழ்பாணத்துக் கூழங்கை சக்கரவர்த்தி வரலாறு காண்க:

    முதலாம் பராந்தக சோழனால் (910-950), சிங்கையில் (நல்லூர்) அமர்த்தப்பட்ட சோழங்க (கூழங்கை யென்பது திரிபு) கூழங்கை சக்கிரவர்த்திகள் மும்டிச்சோழ மண்டலம் கட்டமைப்பு குடியேற்றம் செய்ய இலங்கைக்கு இம்மரபில் வந்த சந்திரசேகர தீக்ஷதர் குமாரர் ராமலிங்க தீக்ஷதர் குலகுருவாக சென்றதை அறிகிறோம். அவர்மகனே "கைலாயமாலை" பாடச்செய்த கங்காதர தீக்ஷதர். சீடர்களான முதன்மை வன்னிமையான யாழ் வன்னிமையை (லங்கை கூற்றப்பிரிவுகளின் முதன்மைப் பிரிவான யாழ்பாண பிரிவு) தோற்றுவித்த காலத்தே, தீக்ஷதர் குருவாயெழுதிக் கணித்து உண்டானதுதான் யாழ்பாண பஞ்சாங்கம். தற்பொழுதும் பாசூரை அடுத்துள்ள கூழங்கையின் பூர்வீக கிராமமான சோழங்காபாளையம் (கல்வெட்டில் சோழகங்கபாளையம்) மேற்கூறியதுக்குச் சாட்சி. மேலும் கீழைக்கலிங்க கங்கர் (Odisha)
     கிளை மரபே (சோடகங்கர்). குடி வைக்கப்பட்ட வன்னிப மகமைகளின் 7 வெவ்வேறு குல வேளாளரில் கூழங்கையின் "கொங்கு வேளாளரே" (கொங்கைவர்) முதன்மையான வன்னிபமென்கிறது கன்னன்குடா சுவடி.  



    (பக்கம்:56)


    சோழர் தலைநகரான பொலநறுவையில் ரன்கொத விகாரையில் காணப்பெறும் 13th நூற்றாண்டு கல்வெட்டில் சோழர் புலியிலச்சினையுடன் "குவலாலபுர பரமேஶ்வரன், கங்கா குலோத்துங்கன், காவேரி வல்லபன், நந்தி கிரிஞ்சதன்" யென்று தெள்ளத்தெளிவாக சேர கங்கர் (கொங்கர்) சாசனமுள்ளது.

    கூழங்கை சக்கிரவர்த்திகள் மரபு


    தங்கள் கங்காகுலத்தினை அண்ணமார் சுவாமிகள் ஆரியகுல வம்சமென்பதும், சோழரை சூரியகுல வம்சமென்பதும் அக்கதையிலிருந்து கிடைக்கும் தெளிவு. 


    கூழங்கையினாட்சியையும், அவர்தம் குலகுரு கவிராஜ குரும்பரம்பரையின் அனுகிரகத்தையும் மறைத்ததன்மூலமே Portuguese Jesuits 1620தில் தங்கள் லங்கை அழிப்பைத் தொடங்கியின்று வரை நடத்தி வருகின்றனர். 


    "திரிகோணமலை கோணேசர் கல்வெட்டென்ற" நூலாசிரியர் "கவிராஜ வரோதயர்" அதாவது  கவிராஜகுரு வரத்திலுண்டானவரென்று அடைமொழிப்பெயருடையவராதலால் 

     ராமலிங்க தீக்ஷதரது பூர்வீகமான திருவானைக்காவல் - உறையூரென்பது திண்ணம். கீழுள்ள website பாக்கவும்




    சோழரோடு மணவினை கொண்டவர்களை மற்றோரொதுக்கியதால், சோழகங்கரென்றயிவர்களை, சோழர்கள் தங்கள் பிரதிநிதிகளாக யாழ்பாணத்திலும், புரியிலும் வைத்தனர்:
    புரி ஜகன்னாதர், கொனார்க் சூரியன் கோயில் ஆகிய அற்புத கோயில்களை கட்டிய இவர்களும் சூத்திரர்களா?


    இக்குடி பிறந்த தெலுங்கு பேசும் வேள்மாக்களும் தங்களை தெலுங்கு வேளமா க்ஷத்திரியர் என அங்கும், தமிழகந்தில் தங்களை தெலுங்கு வெள்ளாளர் எனவும் அழைத்துக்கொள்கின்றனர். சோழர் படைகளில் சென்று தெலுங்கில் ஆட்சியாளர்களாயினர் என்பது வரலாறு:
    ராவ் என்ற ராய (ராஜ) பட்டம் உள்ளவர்கள் இவர்கள். தெலுங்கில் வெள்ளாள வேளமா ராவ் க்ஷத்திரியர்கள், தமிழகத்தில் வேளிர் சூத்திரர் ஆக்கப்பட்டது யாரால்? எப்போது?

    கும்பகோணம் அந்தணரைத்தவிர அனைவரும் சூத்திரர் என்ற விஷ பிரச்சாரத்தை நாத்திக பௌத்த Illuminati ஆங்கிலேயர் போலியான ஒரு சங்கர மடத்தை விஜயநகரத்தை ஸ்தாபித்த தென்னாட்டின்  சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு துரோகமாக எற்படுத்தி, அந்தணர் - அந்தணரல்லாதோர் பிரிவினையை துவக்கி, அந்தணர் - வெள்ளாளர் என்ற குரு - சீடர் உறவினை பிரித்தனர். இதனால் உருவானதே கம்யூனிஸ, முற்போக்கு, ட்ரெவிடியன்,'டேமில்', 'சைவ சித்தாந்த', ஆரியனிஸ இயக்கங்கள். இதுதான் இன்றைய குழப்பங்களுக்குக் காரணம்.
    போலி மடம் பற்றி:
    காஞ்சி காமகோடி பீடம் - ஒரு போலி  (க்ளிக் செய்யவும்)
    Kanchi Kamakoti Math - AMyth (க்ளிக் செய்யவும்): 
    கும்பகோணம் மடம் என்கிற காஞ்சி மடம்:

    போலிச் சங்கராசாரியாருக்கு அஞ்சலி செலுத்தும் போலி நாத்திகர்கள் (கடைசி பார்க்கவும்) 

    குடி புறந்தார் (காணியாளர்):
    பூந்துறை நாட்டு கணியாள கவுண்டர் மங்கிலியம் (சத்து மட்டுமே):

    நாட்டு சபைகளின் உறுப்பினரான இவர்களை, ஊரன் எனக்கூறுகிறது தமிழ் இலக்கணம்.    உழுவித்துண்போர் என்றும் இவர்களைப்பற்றி பதிற்றுப்பத்தும், சிலப்பதிகாரமும் கூறும்:
     13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும்
    கூலம் பகர்நர் 
    குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, 
    அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது   25
    உரை:  24. குடிபுறந்தருநரென்றது தம் 13கீழ்க்குடிகளாகிய வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை13 கீழ்க்குடிகளென்றது உழுதுண்ணும் வேளாளரையும், மேற்குடிகளென்றது உழுவித்துண்ணும் வேளாளரையும் குறித்தன. வரிசையாளர்-வாரம் முதலிய பகுதி தருபவர்; காணியாளர் - நிலத்துக்குரியோர். இவ்விரு வகையினரையும், “வீழ்குடி யுழவர்” (சிலப். 5 : 43) என இளங்கோவடிகளும் குறித்தனர்.
    சிலப்பதிகாரம் - 
    40.   கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும்
    பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
    மாட மறுகும் மறையோ ரிருக்கையும்
      வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
    ஆயுள் வேதருங் காலக் கணிதரும்
    சிலப்பதிகார உரை:
    உழவர்கள் (அல்லது) காணியாளர் - வீழ்குடி உழவர்


    குடி புறந்தருனர் (குடியானோர் - வரிசையாளர்): 
    ஊர் சபையின் கீழ் வரும் குடிகள் குடியானோர் அல்லது உழுதுண்போர்                 எனப்பட்டனர். இவர் வரி செலுத்துவோராதலால் வரிசையாளர் எனப்பட்டனர். (பார்க்க மேல் பாடல்)
    http://en.wikipedia.org/wiki/Western_Ganga_administratio
    பின்னர் கங்க நாட்டைக் கைபற்றியோரும் இதனையே கடை பிடித்தனர். ஆயினும் மணவினைகள் கொள்ள இயலாததால், 'புத்திரவர்க்கம்' எனக் கொண்டனர்.
    http://en.wikipedia.org/wiki/Hoysala_Empire#Administration

    சங்கத்தின் பிற்காலத்தே, கொங்க வெள்ளாளர் அல்லாது,
    களப்பிரரை அடக்கியதால்: வேட்டுவரும் (வேங்கல நாடு, கீழ்கரை அரையநாடு, வாரக்க நாடு
    பிற்காலச் சோழரால்: பால வெள்ளாளர் (கோனாட்டார் - ஆறை நாடு), கணவாள வெள்ளாளர்  ('நரம்புகட்டி கவுண்டர்' - வடகரை நாடு, ஒடுவங்க நாடு), படைத்தலை வெள்ளாளர் (குறுப்பு நாடு)
    மதுரை நாயக்கர்களால்:  கெட்டிமுதலி தொண்டை மண்டல வெள்ளாளர் (பூவாணிய நாடு)
     நாட்டதிகாரம் பெற்றனர்.

    நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர்கள், (மற்றும் காட்டுவலவு, இளங்கம்பர்) : http://kongueswaran.blogspot.in/
    பூர்வீகமாக நாட்டை ஆள்பவர்கள் நாட்டார் எனவும், பிற நாட்டகத்தே போயினும், காணிகள் பெற்று காணி ஆள்பவர்கள் காணியாளர்கள் எனவும், காணிகளை விட்டுப் பெயர்ந்தவர்கள் குடியானவர்கள் எனவும் பிரிந்துள்ளனர். 

    இதுதவிர சுயஜாதி வெள்ளாட்டி மக்கள் காட்டுவளவினர்/காட்டுகுடியினர் எனவும் (பார்க்க: கொங்கு செப்பேடு பட்டயங்கள்), பிறசாதி தாதி மக்கள் இளங்கம்பர் எனும் தொண்டு செய்வோர் எனவும் உள்ளனர் (Edgar Thurston) 

    இன்றும் இக்குணாதிசயங்களைப் பரக்கக் காணலாம். சென்ற தலைமுறை வரையில் ஜாதகம், செல்வத்தினைவிட இப்பிரிவுகளே இருந்தன. பணம், செல்வாக்கினை (Class) மட்டுமே மனதில் கொண்டு தற்கால ஜாதி உள்கட்டமைப்பு முறைகள் நாத்திக இலுமினாட்டியால் குழப்பப்பட்டு, திருமணங்கள் செய்யப்படுவதாலேயே விவாக முறிவுகள் ஏற்படுகின்றன.
    காரணம் நாட்டார், காணியாளர், குடியானவர் என்ற சனப்பிரிவுகளை கடந்த ஒரு தலைமுறை மதியாமையாகும். சாதி ஒன்றாயினும் சனம் வேறு. 


    மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.


    விவரங்களுக்கு: 91 - 424 - 2274700


    நாட்டார்கள் முறைகள் சிறிது மாறுபடுவதால் நாட்டார்களுக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெறுவது மரபு:

    தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) நாட்டார் கோத்திரங்கள்:

    நற்குடி 48000 வெள்ளாளர்:


    நற்குடி 40000நற்குடி 8000
    கொங்க தேசத்தில் ஆதொண்டன் காலத்தில் (3461 BCE) தொண்டை நாட்டில் இருந்து, சேரனால் அழைத்து வரப்பட்டு இங்கேயே இருப்பவர்கள்,பசுங்குடி பன்னீராயிரம் கொங்க வெள்ளாஞ் செட்டிகள்.கிழக்கு தலைவாசல் ஆறுநாடுகளிலிருந்து வடக்கு தலைவாசல் ஆறுநாடுகளில் சேரனால்  (கி.மு 3461  ) குடியமர்த்தப்பட்டவர்கள்.இதனை மணிமேகலை,வல்லை காளத்தி கதை, பாசூர் வீரக்கற்கள் (நடுகற்கள்),ஏடுகள்,கைபீதுகள்,பூந்துறை புராணம் ஆகியவை விவரிக்கின்றன. 





    இவர்கள்  களப்பிரர் காலத்தில் (200-620 CE) சோழ நாட்டின் கோனாட்டுப் பகுதிக்குச் சென்று பின்னர் சோழர்களால் முறைசறிந்த சேரர்களுக்கு சீதனமாக  ஐநூற்றாம் செட்டிகளுடன் இரும்பிடர்த்தலையர் தலைமையில் கொடுக்கப்பட்டு தெற்கு தலைவாசல் ஆறுநாடுகளில் வேட்டுவர் காணிகளில் பாதி காணியாளர்களாக 
    அமர்த்தப்பட்டு, அதன்பின்னர்
    கோனாட்டான்,
    அண்ணமார், சேவூர் (அவிநாசி) சோழியாண்டான், ஆகியோர் உதவியில்  மேற்கு தலைவாசல் நாடுகளில் களப்பிரரை அடக்குவதற்கு வந்த வேட்டுவரை வீழ்த்தி  620-1032 CE காலத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள்.
    மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி, சோழன் பூர்வ பட்டயம்,அண்ணமார் சுவாமி கதை,ஓதாளர் குறவஞ்சி  ஆகியவை இந்த குடியேற்றத்தை விவரிக்கின்றன.

           
        கிழக்குத் தலைவாசல் 

    ஆறு நாடுகளிலிலும்
    1. வெங்கல நாடு
    2. மண நாடு
    3. தலைய நாடு
    4. கிழங்கு நாடு
    5. தட்டைய நாடு
    6. வாழவந்தி நாடு

        பின்னர் சேரர்களால்
       வடக்கு தலைவாசல் ஆறு நாடுகளான:
    1. பூந்துறை நாடு,
    2 .வடகரை நாடு
    3. அரைய நாடு
    4. பூவாணிய நாடு
    5. காஞ்சிகோயில் நாடு
    6. ராசிபுர நாடுகளிலும்,

    குடியமர்த்தப்பட்டவர்கள்
     .    தெற்கு தலைவாசல் ஆறு நாடுகள்:
    1. நரையனூர் - நல்லுருக்கா நாடு
    2. தென்கரை நாடு
    3. காங்கய நாடு
    4. பொங்கலூர் நாடு
    5. வைகாவூர் நாடு
    6. அண்ட நாடு

    ஆகிய நாடுகளில் சோழர் சீதனமாக 500 circa குடியமர்த்தயமர்த்தப்பட்டு,

        மேற்கு தலைவாசல் ஆறு நாடுகள்:
    1. ஓடுவங்க நாடு
    2. குறுப்பு நாடு
    3. ஆறை நாடு
    4. வாரக்கா நாடு
    5. காவடிக்கா நாடு
    6. ஆனைமலை நாடு
    ஆகியவற்றில் குலோத்துங்க சோழனுக்கு பின்னர் குடியமர்த்தப்பட்டவர்கள்
    காணியாட்சி ஸ்தானிகர்களாக கிராமிய ஆதிசைவ குருக்கள் உள்ளனர்காணியாட்சி ஸ்தானிகர்களாக கிராமிய அலகு ஆதிசைவ குருக்கள் உள்ளனர்
    பாஷை:
    அப்பா-அண்ணா
    அம்மா-ஆய்,ஆயா
    அம்மாவின் அம்மா - அம்மாயி
    அப்பாவின் அம்மா- அப்பத்தாயா
    அப்பாவின் அப்பா-அப்பாறைய்யன்
    சகோதரர்கள்-அப்பன்

    பாஷை:
    அப்பா-அய்யா
    அம்மா-ஆத்தா
    அம்மாவின் அம்மா - அம்மத்தா
    அப்பாவின் அம்மா- அப்பத்தா
    அப்பாவின் அப்பா-அப்பாறு

    ஒவ்வொரு வளவு,கூட்டத்துக்கும் நாடு, காணியாள அருமைக்காரர்கள் தனித்தனியே உண்டு.
    எழுதுங்கள் சீர் உண்டு. 
    இணைச்சீர் உண்
    ஏழு நாட்கள் கல்யாணம்
    கல்யாணத்தில் பெண்ணின் மாமன் குடை பிடித்தல்
    நற்குடி 40000த்தில் இருந்து வந்த கருமாபுரம் ஆதி காணியான முழுக்காது பிரழந்தை நாட்டு அருமைக்காரர் மட்டுமே.
    தனியாக அருமைக்காரர் இல்லை.
    இரண்டு நாட்கள் கல்யாணம்.
    எழுதிங்கள் சீர் இல்லை.
    பெண்ணுக்கும் -மாப்பிள்ளைக்கும்  தாய்மாமன்மார்  சுற்றிப்போடல் பட்டினி  தண்ணீர்,உருமால் கட்டு சீர்,
    கொழுந்தியாள் ஆலாத்தி பாடல்.
    யெழுகரை நாட்டார் 12 அன்று தீட்டு நீங்கி, பதினாறன்று யெண்ணைய் தேய்ப்பு செய்கின்றனர்.பிறருக்கு கருமாதியோடு அந்திம சம்ஸ்காரம் முடிவுமுப்பிறை வழிபாடு உண்டு
    பெரிய பட்டம் பூந்துறை நன்னாவுடையார்பெரிய பட்டம் கொத்தனூர் வேணாவுடையார் 
    அருமைக்காரரே தாலி எடுத்து கொடுப்பாரபட்டக்காரர் கொடுப்பார்

    பழைய கம்பர் மங்கல வாழ்த்து


    கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய மங்கல வாழ்த்து வாழி


    காப்பு

    நல்ல கணபதியை நாம் காலமே தொழுதால்
    அல்லல்வினையெல்லாம் அகலுமே சொல்லரிய
    தும்பிக்கை யோனைத் தொழுதால் வினைதீரும்
    நம்பிக்கை யுண்டே நமக்கு. 4

    அகவல்


    காப்பு வெண்பா
    
    நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
    அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
    தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
    நம்பிக்கை உண்டே நமக்கு.
                அகவல்பா
    

    அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்
    திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்
    கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
    சந்திர சூரியர் தானவர் வானவர்
    முந்திய தேவர் மூவருங் காத்திட
    நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
    தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!
    சீரிய தினைமா தேனுடன் கனிமா
    பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
    சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்           10
    மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்கு
    எள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன்
    பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்
    செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து
    ஆரமுது அருந்தும் அழகு சிறந்த
    பேழை வயிற்றுப் பெருமதக் களிறே
    அடியேன் சொல்லை அவனியில் குறித்துக்
    கடுகியே வந்தென் கருத்தினில் நின்று
    நினைத்த தெல்லாம் நீயே முடித்து
    மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்!           20
    மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓத
    என்குரு நாதன் இணையடி போற்றி
    கிரேதா திரேதா துவாபர கலியுகம்
    செம்பொன் மகுடம் சேரன் சோழன்
    பாரமா முடியும் பாண்டியன் என்னும்
    மூன்று ராஜாக்களும் ராஜ்யம் ஆளுகையில்
    கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்
    சிறந்த மானிடம் தாயது சுத்தம்
    வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம்
    இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில்           30
    பக்குவம் ஆகிப் பருவங் கொண்டு
    திக்கில் உள்ளோர் சிலருங் கூடி
    வேதியன் பக்கமே விரைவுடன் சென்று
    சோதிடனை அழைத்துச் சாஸ்த்திரங் கேட்டு
    இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி
    இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி
    இருவர் பேரையும் இராசியில் கேட்டுக்
    கையில் ஓடிய கைரேகைப் பொருத்தம்
    ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்
    தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
    வாசல் கௌலி வலிதென நிமித்தம்           40
    தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
    குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு
    உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்
    பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து
    சிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டு
    மச்சினன் ஊருக்கு வண்டியில் சென்று
    வெண்கல முரசம் வீதியில் கொட்டத்
    தங்க நகரி தானலங் கரித்து
    முத்துக்கள் தன்னை முசம்பரக் கொட்டி
    சித்திரக் கூடம் சிறக்கவே விளக்கி
    உரியவர் வந்தாரிங்கு உன்மகளுக் கென்று சொல்லி           50
    பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி
    நாளது குறித்து நல்விருந்து உண்டு
    பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து
    வாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமே
    கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்
    தேம்பனை யோலை சிறக்கவே வாரித்
    திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக்
    கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார்
              60
    பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கி
    வாழை கமுகு மகமேருடனே
    சோலை இலையால் தோரணங் கட்டி
    மூத்தோர் வந்து மொழுகி வழித்துப்
    பார்க்குமிடம் எங்கும் பால்களைத் தெளித்துப்
    பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக்
    கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி
    நேரிய சம்பா அரிசியை நிறைத்துப்
    பாரிய வெல்லம் பாக்கு வெற்றிலை           70
    சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
    வாரியே வைத்து வரிசை குறையாமல்
    முறைமை யதாகவே முக்காலி மேல்வைத்து
    மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
    குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்
    போன மச்சம் மகமது துடைத்து
    எழிலான கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்
    குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்துமே
    ஏழு தீர்த்தம் இன்பமுடன் இட்டு           80
    மேள முடனே விளாவியே வார்த்துச்
    செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்து
    வண்ணப் பட்டாடை வஸ்திரந் தன்னை
    அன்ன முப்பழமும் ஆவின் பாலும்
    நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி
    மன்னவர் முன்னே வந்தவ ருடனே
    வாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச்
    சாணங் கொண்டு தரைதனை மெழுகிக்
    கணபதி ஒன்றை கருத்துடன் நாட்டி
    அருகது சூடி அருள்பொழிந் திடவே
    நிரம்பி யதாக நிறைநாழி வைத்து           90
    வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்து
    அலைகடல் அமிர்தம் அவனியில் நீரும்
    குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து
    களரியோர் மெச்சிட காப்பதுகட்டி
    குப்பாரி கொட்டிக் குலதேவதைத் தான் அழைத்துச்
    செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்து
    சாந்து சந்தனம் தான் பன்னீரும்
    சேர்த்து கலக்கி சிறக்கவே பூசிக்
    கொத்தரளி கொடியரளி கோத்திரத்து நல்லரளி           100
    முல்லை இருவாட்சி முனைமுறியாச் செண்பகப்பூ
    நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும்
    வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும்
    மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புஷ்பங்களும்
    புன்னை கொன்னை பூக்கள் எல்லாம் கொண்டு வந்து
    தண்டை மாலை கொண்டை மாலை சோபன மாலை சுடர்மாலை
    ஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்து
    திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து
    நட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைதனுக்கு           110
    நன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே
    செஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித்
    திருஷ்டி கழித்துச் சிவசூரி யனை கைதொழுது
    அட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்து
    மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்தி
    இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச்
    சந்தனம் புனுகு சவ்வாது மிகப்பூசி
    மந்தாரை மல்லிகை மரிக்கொழுந்து மாலையிட்டு
    ஆடை ஆபரணம் அழகு பெறத் தான்பூண்டு
    கூறை மடித்துவைத்துக் குணமுள்ள தங்கையரும்
    பேழைமூடி தான்சுமந்து பிறந்தவரைச் சுற்றிவந்து           120
    பேழையை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்தி
    கூறைச்சேலைத் ஒருதலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்து
    மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்து
    அருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையை
    அரிசியில் பதித்துவைத்து ஐங்கரனைப் பூசித்து
    மங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச்
    செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார்
    குடிமகன் மங்கள வாழி கூறி முடித்தவுடன்
    வேழ முகத்து விநாயகனின் தாள்பணிந்து
    சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய
    இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு           130
    அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்
    முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப்
    பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கி
    இந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்பு
    தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப்
    பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்று
    மாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப்
    போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித்
    தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப்
    போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப்           140
    பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
    மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத்
    தந்தை யானவர் தண்டிகை மேல்வரத்
    தமையன் ஆனவர் யானையின் மேல்வர
    நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத்
    தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப்
    பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப்
    பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊத
    எக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம்
    கைத்தாளம் பம்பை கனக தப்பட்டை தான்முழங்கச்           150
    துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத
    சேகண்டி சங்கு திமிர்தாளம் பம்பையுமே
    வலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவர
    உருமேளம் பறமேளம் உரம்பை திடும்படிக்கப்
    பலபல விதமான பக்கவாத்திய முழங்கப்
    பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர
    வெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச்
    சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்க
    இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக்
    குதிரையின் மீதமர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை           160
    சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக்
    கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர
    நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்
    பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திட
    மேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்க
    அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப்
    பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்து
    மன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்து
    எதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்க
    உடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப்           170
    வெகுசனத் துடனே விடுதியில் இறங்கி
    வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும் என்று           180
    நாழி யரிசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்
    பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலியற்கு
    நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப்
    பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்
    பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
    சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை
    முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
    திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று
    அஷ்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை
    அன்ன நடையாரும் அருமைப் பெரியவரும்           190
    பொன் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்று
    இன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச்
    சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில்
    நாட்டில் உள்ள சீர் சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம் என்று
    கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக்
    கண்டு மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்
    நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம்
    பூட்டினார் தோடெடுத்துப் பொன்னார் திருக்காதில்
    தங்கக் சங்கிலி தன்னைத்தான் கழுத்தில் இட்டார்கள்
    அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி
    ஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச்
    சாந்து பொட்டிட்டு சவ்வாது மிகப்பூசி
    ஊட்டுமென்றார் சாதம் உடுத்துமென்றார் பட்டாடை
    பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து
    அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்
    தாய்மாமன் தன்னை தன்மையுடனே அழைத்து
    சந்தானம் மிகப்பூசி சரிகைவேஷ்டி தான்கொடுக்க
    பொட்டிட்டு பொன்முடி பேடை மயிலியற்கு
    பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய
    ஆரணங்கு பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
    மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
    வழமைதாய்வந்து நலமதாய் நின்று
              200
    ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடை
    பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து
    அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்
    தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்து
    சந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப்
    பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப்
    பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய
    ஆணிப் பெண்ணவளை அலங்கரித்துக் குளம் கோதி
    மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
    வலமதாய் வந்து நலமதாய் நின்று           210
    செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்து
    நிறைநாழி சுற்றியே நீக்கித் திருஷ்டிகழித்து
    அட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்து
    மங்கள கலியாண மணவறையை அலங்கரித்து
    அத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டு
    பஞ்சவர்ண நிறச்சேலை பவளவர்ணக் கண்டாங்கி
    மாந்துளிர்சேர் பூங்கொத்து வர்ணமுள்ள பட்டாடை
    மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டி
    கட்டியே இருக்கும் கனம்பொருந்திய வாசலிலே
    அருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப்
    பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச்           220
    சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
    செம்பொன் மிகுந்தோர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
    வீரலட்சுமியவள் விளங்கிடும் வாசலிலே
    விருதுகள் வழங்கிடும் விசேஷ வாசலிலே
    தரணியில் அன்னக்கொடி கட்டியிருக்கும் வாசலிலே
    பன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே
    நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப்
    பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச்
    சாலுங் கரகமும் சந்திர சூரியரும்
    அம்மி வலமாக அரசாணி முன்னாக           230
    ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச்
    சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்
    பத்தியுடன் இத்தனையும் பாரித்தார் மணவறையில்
    மணவறை அலங்கரித்து மணவாளனை இருத்தி
    அழகுள்ள பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
    மாமன் எடுத்து மணவறை சுற்றிவந்து
    மகிழ்ச்சியது மீதூற வலப்புறம் தானிருத்திக்
    குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க
    ராமன் இவரோ! லட்சுமணன் இவரோ!
    கண்ணன், இந்திரன், காமன் இவரோ!           240
    அத்தை மகள்தனை அழகுச் செல்வியை
    முத்து ரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக்
    கணபதி தெய்வமுன் கட்டும்மங் கிலியம்வைத்து
    அருமைப் பெரியவர் அன்புடன் பூஜைசெய்து
    மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக்
    கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று சப்திக்க
    மாணிக்கம்போல் மாங்கல்யம் வைடூரியம்போல் திருப்பூட்டி
    ஆரம்தன்னைச் சூட்டி அமர்ந்தபின் மணவறையில்           250
    மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக்
    கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச்
    சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே
    கங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரையை
    மங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கி
    மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்
    பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்து
    அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர்
    கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத்
    தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து           260
    உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலே
    தண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு
    பிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்து
    மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்று
    செங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும்
    சாப்பாடு போஜனம் சந்தோசஷ மாய்ப்போட
    உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்
    கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார்
    மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்து
    கலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து           270
    கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்
    அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து
    பணமது பார்த்துக் குணமது கழித்து
    கல்லு வராகன் கருவூர்ப் பணமும்
    வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
    சம்மன் கட்டி சாத்தூர் தேவன்
    உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்
    ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு
    ஒருமுழி முழிக்க ஒருமுழி பிதுங்கப்
    பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து           280
    முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன்
    பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்
    பந்தல் கவுளி பாக்கியம் உரைக்க
    மைத்துனன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச்
    சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச்
    சந்தோ ஷமாகித் தங்கமுடி மன்னவர்கள்
    பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்
    ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்பட
    நாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனே
    சகாயம் என்ற பேர்களுக்குத் தனிப்பணம் தான்கொடுத்து           290
    வாழிப் புலவர்களுக்கு வரிசைதனைக் கொடுத்துத்
    திட் டமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்கு
    அரிசி அளந்தார்கள் அனைவரும் தானறிய
    கரஹம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும்
    புடவைதனைக் கொடுத்து பின்னும் தலைமுழுகிச்
    சட்டுவச் சாதம் பெண் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்கு
    சாதம் பரிமாறி சாப்பிட்டு ஆனவுடன்
    பண்ணையத்து மாதிகனைப் பண்பாகத் தானழைத்து
    வில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்பு
    காலும் விளங்கக் கன்னிகையைத் தானழைத்து           300
    மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்து
    மாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்து
    மங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன்
    மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
    துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
    பஞ்சவர்ணக் கண்டாங்கி பவளவர்ணப் பட்டாடை
    அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
    இந்திர வவர்ணப்பட்டு ஏகாந்த நீலவவர்ணம்
    முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
    பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை           310
    கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணியும்
    வட்டில் செம்பும் வழங்கும் சாமான்களும்
    காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
    குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்
    நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!
              321
                                     வாழ்த்துரை
    
          ஆதி கணேசன் அன்புடன் வாழி!
          வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
          எம்பெரு மானின் இணையடி வாழி!
          மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
          திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
          முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி
          நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
          வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
          பாரத தேசம் பண்புடன் வாழி!
          கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
          காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
          வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
          மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
          வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
          என்குரு கம்பர் இணையடி வாழி!
          வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
          வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!
          இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே!
          ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி,
          மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க! 
    மங்கல வாழ்த்து தனியாக வேறுபட்டு உள்ளது.அதில் தொண்டை மண்டல 79 வளநாடுகளைப் பற்றி வருகிறது:


















    சூரிய வம்ச கங்கா (கொங்க) குலத்தவரின் வம்ச பரம்பரை 

    நற்குடி நாற்பதாயிரம் நாட்டார் A,B,C&D 
    (ஆதொண்டன் கால குடிகள் - 3461 BCE):
    A.பூந்துறை கிளை நாடுகள் -அறுகரை நாட்டார்:

    பூந்துறை நாட்டுக் கவுண்டர்கள் மங்கிலியம் (சத்து, குளிசம் கொண்டது):



      பூந்துறை நாட்டார் (சேரமான் புத்திர வர்க்கம்):
      1. பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்
      2. வெள்ளோடு பயிர கோத்திரம்
      3. வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்
      4. நசியனூர் கன்ன கோத்திரம்
      5. நசியனூர் செம்ப கோத்திரம் 
      6. எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்
      அரைய நாட்டார்:
      1. தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்
      காஞ்சிகோயில் நாட்டார்:
      1. காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்
      2. காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்
      3. காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்

      B.கீழ்க்கரை- எழுகரை நாட்டார்:
      3.எழுகரை நாட்டுக் கவுண்டர் மங்கிலியம் (குளிசம் மட்டுமே)



      தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) எழுகரை (மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள். இவர்கள் இன்றுவரை காணியாளர், குடியானவர்களோடு மணவினைகள் கொள்வதில்லை:



      1. மோரூர் கன்ன கோத்திரம்
      2. மொளசி கன்ன கோத்திரம்
      3. பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்  
      4. ஏழூர் பண்ணை கோத்திரம் 
      5. கலியாணி பண்ணை கோத்திரம்
      6. ராசிபுரம் வெளிய கோத்திரம்
      7. வீரபாண்டி மணிய கோத்திரம்
      8. மல்லசமுத்திரம் வெளிய கோத்திரம்
      9. திண்டமங்கலம் ஆந்தை கோத்திரம் (விழியன் தவறுதலாகும்)
      10. வெண்ணந்தூர் காடை கோத்திரம் (கண்ணன் தவறுதலாகும்)
      C: கிளை நாட்டார்:
      மண நாட்டுப்பெரியதனம்:
      1. கூடலூர் வெண்டுவ கோத்திரம்
      2. கூடலூர் பண்ணை கோத்திரம்
      தலைய நாட்டார்:
      1. கன்னிவாடி கன்ன கோத்திரம்
      D. காராள நாட்டார்:
      கிழங்கு நாட்டார், வாழவந்தி நாட்டார்:
      1. வாங்கல் பெருங்குடி கோத்திரம்
      2. மோகனூர் மணிய கோத்திரம்
      தட்டய நாட்டார்:
      1. புலியூர் பெருங்குடி கோத்திரம்
      வேட்டுவக்கவுண்டர் பட்டக்காரர்கள்:

      பெருந்தாலி வேட்டுவர்

      சிறுதாலி வேட்டுவர்


      1.

      கண்ணப்ப நாயனார் தலைமையில் திருஞானசம்பந்தர் காலம் (620 CE) காலத்தில் களப்பிரர்களை அடக்க சேரனால் காளத்தியிலிருந்து குடியமர்த்தப்பட்டவர்கள்

      சேரமான் - சுந்தரமூர்த்தி நாயனார்கள் காலத்திற்குப்பின் (825 CE) செட்டி சிவபிராமண ஆட்சியாளர்களான காசிப கோத்திர ஆதி சைவர்களால் களப்பிரர் வம்சமான வீரசிங்கநாட்டுப் பிரான்மலைக் கள்ளரை அடக்க கண்ணப்ப நாயனாரது ஆறாம் தலைமுறைப் பேரன் முத்தணி ராசன் காலத்தில் காளத்தியிலிருந்து குடியேற்றப்பட்டவர்கள்

      2.

      சேரனின் முத்திராங்கிதமான கொங்கப் பெருந்தாலி அருமைப்பெரியவர் கொண்டு அணிவோர். 

      பாண்டியன் காலத்தில் அளித்த சிறுதாலி அணிவோர்.

      3.

      வடக்கு, தெற்கு, மேற்குத் தலைவாசல் ஆறுநாடுகளில் காணிகள் உடையோர்

      கரூரைச் சூழ்ந்த கிழக்குத் தலைவாசல் ஆறுநாடுகளில் காணிகள் கொண்டோர்.

      4.

      கீழ்க்கரை அரைய நாட்டு அல்லாள இளையா நாயக்கரைப் பெரிய பட்டக்காரராக உடையோர்

      வெங்கல நாட்டு புன்னம் பொத்தி சேசுவராயனையும், பவுத்திரம் காளத்திக்கவுண்டரை பெரிய பட்டக்காரர்களாகக் கொண்டோர்.

      5.

      வளவு அருமைக்காரர்களை தனியாக உடையோர்

      பட்டக்காரர்களையே அருமையாகக் கொண்டோர்.

      6.

      தமிழ்நாடு சர்க்காரின் மிகவும் பிற்படுத்தபகபட்டோர் பட்டியலில் 183வதாகவும், மத்திய சர்க்காரின் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் 165வதாகவும்

      Vettuva Gounder, வேட்டுவக் கவுண்டர் என குறிப்பிடப்படுவோர்

      1. தமிழ்நாடு சர்க்காரது சீர் மரபினர் (DNC) பட்டியலில் 

      232வது ஜாதியாகவும், மத்திய சர்க்காரது பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 155வதாகவும் குறிப்பிடப்படும் Punnan Vettuva Gounder ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts), புன்னம் வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) ஜாதியினர் 


      1. தமிழ்நாடு சர்க்காரது சீர் மரபினர் (DNC) பட்டியலில்

      252வதாகவும், மத்திய சர்க்காரது பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) 165வதாகவும் Vettuva Gounder (Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts), வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) குறிப்பிடப்படும் ஜாதிகள்

      7.

      நற்குடி 8000 வெள்ளாளர் படையை சோழனுக்காக நடத்திவந்த அண்ணமாரை குலதெய்வமாக வெள்ளோடு, எழுமாத்தூர், நடந்தை முதலான பல ஊர்களில் வணங்குவோர். எழுமாத்தூர் போன்ற ஊர்களில் அண்ணமார் கோயில் பூசாரிகளாகவும் உள்ளோர்.

      நற்குடி 8000 வெள்ளாளர் படையை சோழனுக்காக நடத்திவந்த அண்ணமாரை தங்களது பரம விரோதியாகப் போரிட்டோர். தலையூர் காளி இவ்வினத்தின் தலையநாட்டுப் படடக்காரர ஆவார். வெங்கல நாட்டார் மட்டும் வரம் "வெட்ட வெட்டத் தழையும் வெற்றி வெங்கல நாடு" என மாயவர் அருளால் பொன்னர் வரம் பெற்றோர்.

      8.

      எக்காலத்திலும் குற்றப்பரம்பரை சட்டத்தின்படி (CTA) குற்றப்பரம்பரைகளாக அறிவிக்கப்படாதோர்.

      குற்றப்பரம்பரைச் சடத்தின்படி அறிவிக்கப்பட்டிருந்தோர் (CT, DNT) .

      9.

      வடக்கத்தி, மேற்கத்தி, பெருந்தாலி வேட்டுவர் என்று பெயர்கள் கொண்டோர்

      குளிசங்கட்டி, குடிசைகட்டி, சிறுதாலி, கிழக்கத்தி, தெற்கத்தி வேட்டுவர் என பெயர்கள் பெற்றோர்.

      10.

      பெருந்தாலி வேட்டுவரான அப்பிச்சிமாரை கொங்க வெள்ளாளரில் பூந்துறை கிளை நாட்டார் உள்ளிட்ட பலர் தங்களது குலதெய்வங்களாக் கொண்டுள்ள்னர்.

      ஏதும் இல்லை.

       (கொங்கத்தாலி) & பூவிலுவக்கவுண்டர்களில் பட்டக்காரர்கள்: 

      (சேரர் ஆட்சியில் சம்மந்தர் காலத்தில் 650CE நியமிக்கப்பட்ட   பட்டக்காரர்கள்):
      1. கீழக்கரை அரைய நாடு - அல்லாள இளையா நாயக்கர்

      வாரக்க நாடு - பூலுவ கவுண்டர்களில் 
      (சேரர் ஆட்சியில் சம்மந்தர் காலத்தில் 650CE நியமிக்கப்பட்ட  பட்டக்காரர்கள்):
      1. முதல் பட்டம் தொட்டிபாளையம் வடவள்ளி மெத்தையூட்டுக் கவுண்ட பட்டக்காரர்
      2. இரண்டாம் பட்டம்  சிதம்பரம் செஞ்சேரி அய்யம்பாளையத்தார் 
      3. மூன்றாம் பட்டம் கோப்பண மன்றாடியார் 

      வேட்டுவக்கவுண்டர்களில் முத்தணி ராசன் வம்சமான (குளிசம்கட்டி) வேட்டுவர்: 
      (சிவப்பிராமணர் ஆட்சியில் 825CEக்குப்பிறகு பாண்டியனால் நியமிக்கப்பட்ட கீழ்கண்ட நாடுகளுக்குப் பட்டக்காரர்கள்):
      1. வெங்கல நாடு -  
      • புன்னம் பொத்தி சேசுவராய கவுண்டர் பொத்தியாவார்.

      • முதல் பட்டம்: வேட்டுவ பட்டக்காரர் பவித்திரம் காளத்திக் கவுண்டர் (இலுப்பைகிணத்துபட்டி பட்டம்) - கண்ணப்பர் நேரடி பங்காளிகள்
      • நடு்ப்பட்டம் என்று ஒரு பட்டம் நாகம்பள்ளியில் உள்ளதாக பட்டயங்கள் தெரிவிக்கின்றன.

      • மூன்றாம் பட்டம்: தெங்கரை பட்டம் காக்காவாடி பட்டம் (பிச்சம்பட்டி பட்டம்) , சீத்தப்பட்டி, நல்லகுமாரபட்டி
      • ஆத்தூரில் வடகரை பட்டம் என்று மற்றொரு பட்டம் இருந்ததாக பட்டயங்கள் சொல்கின்றன

      2. தலைய நாடு - 
      • இரண்டாம்பட்டம் குன்னாடி வேட்டுவர் குல வள்ளல் கவுண்டர் (தலையூர் காளி வம்சம்) - புங்கம்பாடி 
      • மூன்றாம் பட்டம் வள்ளல் நல்ல பெரியாக்கவுண்டர்  வேட்டுவர் - பட்டுத்துறை பட்டம், நவாமரத்துப்பட்டி,இனுங்கனூர்
      1. மண நாடு - தென்னிலை சிறுத்தலை வேட்டுவர், மாகாளி வேட்டுவர், வெங்கச்சி வேட்டுவர் கொங்கராயன் வம்சம் மற்றும் இருவர் என ஐந்து பழைய பட்டக்காரர்கள்.
      • தற்போது முதல் பட்டம் தென்னிலை  மாகாளி வேட்டுவர் 
      • இரண்டாம் பட்டம் நடந்தை கதிப்ப வேட்டுவர் 

      நற்குடி 8000 (I&II):
      (களப்பிரரால் சோழ நாடு சென்று அண்ணமார் காலத்தில் துவங்கப்பட்ட கோனாட்டான் சீதன மறுகுடியேற்றம்- 
      800 -1032 CE ):
      I. நற்குடி 8000 நாட்டார்:
      தென்கரை நாட்டார்:
      1. கொத்தனூர் பெரிய கோத்திரம்
      2. மூலனூர் பூச கோத்திரம்
      காங்கய நாட்டார்:
      1. காங்கயம் செங்கண்ண கோத்திரம்
      2. காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்
      3. ஆனூர் பயிர கோத்திரம் (வள்ளியறச்சல் பில்ல கோத்திரம் சில சமயங்கள்)
      பொங்கலூர் நாட்டார்:
      1. குண்டடம் ஓதாள கோத்திரம் 
      2. கொடுவாய் ஓதாள கோத்திரம்
      3. பொங்கலூர் பொன்ன கோத்திரம் 
      4.  புத்தறச்சல் குழாய கோத்திரம் 
      5. உகாயானுர் சாத்தந்தை கோத்திரம் (செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள்எடுத்துக்கொடுக்கும் உரிமை)
      குறுப்பு நாடு:
      1. எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம் 
      உறவின்முறை:
      வையாபுரி நாட்டார்:
      1. பழனி ஈஞ்ச கோத்திரம்
      அண்ட நாட்டார்:
      1. பொருளூர் பூச கோத்திரம்

      II. பாளையப்பட்டு ஜமீன் நாட்டார் (நாயக்கர் காலம் 1500க்குப்பிறகு):
      காவிடிக்கா நாட்டார்:
      1. ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்
      நல்லுருக்கா நாட்டார், நரையனுர் நாட்டார், தென் பொங்கலூர் நாட்டார்:
      1. கீரனூர் கண்டியம்மன் பவள கோத்திரம்

      இவர்கள் மட்டுமன்றி,

      கணவாளர் 
      (நரம்புகட்டி வெள்ளாள கவுண்டர்கள் 800CE):
      1. வடகரை நாடு 
      2. ஒருவங்க நாடு 
      கெட்டி முதலி தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்/கவுண்டர்கள் (திருமலை நாயக்கர் காலம்):
      1. பூவாணிய நாடு 
      படைத்தலை வெள்ளாள கவுண்டர்கள் (800CE):
      குறுப்பு நாட்டின் 2,3,4,5,6 ஆம் பட்டங்கள் 

      சேலம் கெஜட்டியர் (1920s) நாட்டார், காணியாளர் வேறுபாடு பற்றி:தாலி,புலவர்,சீர் வேறுபாடுகள் 

      10 comments:

      1. அற்புதம் அற்புதம் சிறப்புங்க அருமையான தகவல் மிக சிறப்பாக ஆராய்ந்து கூறியுள்ளிர்கள்.அனந்த கோடி நமஸ்காரம் தங்களுக்கு..வணங்குகிறேன் தங்களை

        ReplyDelete
      2. அருமைங்க நல்ல தகவல்கள்

        ReplyDelete
      3. அற்புதம் அற்புதம் சிறப்புங்க அருமையான தகவல் மிக சிறப்பாக ஆராய்ந்து கூறியுள்ளிர்கள்

        ReplyDelete
      4. சிறப்பு ங்க அருமைங்க அருமை

        ReplyDelete
      5. 8000 நற்குடி நாட்டார் மங்கிலியமும் புகைப்படம் இட்டால் சிறப்பாக இருக்கும்ங்க

        ReplyDelete
      6. வெள்ளாள கவுண்டர்களின் பிறப்பு இறப்பு
        பூப்பு நீராட்டு திருமணம் போன்ற எந்த நிகழ்ச்சிகளுக்கும் அந்தணர்கள் புரோகிதம் செய்வதில்லையே மேலும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மாறாக புடவை மாத்தியம்மனை வழிபடுவது ஏன் யாராவது விபரம் கூற இயலுமா

        ReplyDelete
        Replies
        1. பூந்துறை நாடே தலைமையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

          பூந்துறை காடையினர் காணி குருக்கள்,பஞ்சாங்கர் வைத்து அமாவாசை எள்ளுந்தண்ணியுமிறைக்கும் சீர் என பரம்பரையாக செய்கின்றனர்.

          Delete
      7. தவறான தகவல்.புடவைக்காரி என்பது வீரமாத்தி வழிபாடு.திதி அல்ல.
        http://kongukulagurus.blogspot.com/2009/09/blog-post.html?m=1
        படியுங்கள் ஆதாரங்களோடு.

        நொய்யலுக்கு தெற்குள்ள நற்குடி 8000 வெள்ளாளர் 16 செய்யும் பழக்கமுள்ளவர்கள்.

        ReplyDelete
      8. சேலம்,நாமக்கல் உள்ளிட்ட மழகொங்க பகுதியில் மட்டுமே புடவைக்காரி சடங்கு செய்கின்றனர்.

        அங்கிருந்து குடகொங்கில் காணி,நாடு பெற்ற சிலரும் வீரமாத்தி இருந்தால் செய்கின்றனர்.

        ReplyDelete